மஹியங்கனையில் இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை
Sri Lanka Police Investigation
Crime
Murder
By Pavi
பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை காவல் பிரிவுக்குட்பட்ட அலுகெட்டியாவ பகுதியில் வீடொன்றின் முன்பாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10.09.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர் அபேபுர - மாபாகடவெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
ஒருவர் பலி
இந்த நிலையில் கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்தில் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை காவவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்