தேநீர் அருந்த பால் மா வாங்கச்சென்ற இளைஞன் கோடீஸ்வரனாகிய அதிஷ்டம்
பால்மா வாங்க சென்ற இளைஞன் கோடீஸ்வரன்
பால்தேநீர் குடிக்க பால் மா வாங்குவதற்கு மளிகை கடைக்கு சென்ற இளைஞன் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
அமெரிக்காவின் செஸ்டர் கவுண்டியை சேர்ந்த இளைஞருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. குறித்த இளைஞன் வீட்டில் தேநீர் குடிக்க நினைத்த போது குளிர்சாதனப்பெட்டியில் பால் இல்லாமல் இருப்பதை கண்டார்.
இதையடுத்து நடந்த ஆச்சரியத்தை அவரே சொல்கிறார். பால் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றேன்.
A trip to the grocery store for milk resulted in a Chester man winning $2 million. Story: https://t.co/6KhbJpUqKQ #sclottery pic.twitter.com/ry5wFMM3qa
— SC Education Lottery (@sclottery) May 26, 2022
இன்ப அதிர்ச்சி
அப்போது கவுண்டரில் பவர்பால் அதிஷ்டஇலாப சீட்டிழுப்பு குறித்த விளம்பரம் இருந்தது.
அதை வாங்கினேன். அடுத்தநாள் நான் கோடீஸ்வரன் ஆகிவிட்டேன், ஆம் அந்த லொட்டரியில் $2 மில்லியன் (இலங்கை மதிப்பில் ரூ 70 கோடிக்கு மேல்) பரிசு என விழுந்திருந்தது.
இதையடுத்து இன்ப அதிர்ச்சியில் நான் உறைந்துவிட்டேன். உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.