புதிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா : உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷ்யா (Russia) புதிய இராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்பு காணப்படுகிறது என உக்ரைன் (Ukraine) கருதுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 3 வருடங்களை கடந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை இன்னும் முடிவடையவில்லை.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
30 நாள் போர் நிறுத்தம்
அந்த வகையில், அமெரிக்கா 30 நாள் போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அதன்படி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷ்யா புதிய இராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் கருதுகிறது.
ஜெலன்ஸ்கியின் கருத்து
இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷ்யா பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, இன்னும் அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறது.
புதின் வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
