குடிமனைக்குள் புகுந்த குரங்குகள் கடித்ததில் 06 பெண்கள் படுகாயம் : கடும் அச்சத்தில் மக்கள்
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனைபகுதிக்குள் உள்நுழைந்த குரங்குகூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாய மடைந்துள்ளதுடன் குரங்குகளின் அட்டகாசத்தால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரை ஒடுகள் மற்றும் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் தாம் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாது அச்சத்துடன் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வந்தாறுமூலை பேக்வீதியில் நேற்று(21) வீட்டைவிட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவர் மீது குரங்குகடித்ததையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார் இவரின் காலில் பாரிய தசைபகுதி இல்லாமல் போயுள்ள நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குடிமனைக்குள் புகுந்து அட்டகாசம்
இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 6 பேர் குரங்குகடிக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் பெண்கள் கடந்த சில வாரங்களாக குடிமனை பகுதிக்குள்; உள்நுழைந்த குரங்கு கூட்டம் வீட்டின் கூரைகளை உடைத்து சேதமாக்கிவருவதுடன் மாமரம், பலாமரம் போன்ற பயன்தரும் மரங்களின் பழங்கள் காய்களை பிடுங்கி அழித்து வருகின்றது
அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்கள்
அவ்வாறே அந்த பகுதியில் பயிரிடப்பட்ட மரக்கறிகளை பிடுங்கி அழித்து அட்டகாசம் செய்துவருவதுடன் வீட்டில் இருந்து வெளியே வரும் வயதான பெண்களை குறிவைத்து அவர்கள் மீது தாக்கி அவர்களை கடித்ததில் அவர்கள் படுகாயமடைந்துள்ளதையடுத்து மக்கள் பயபீதியில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கிகிடப்பதாக தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
