பொருளாதார நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

Parliament of Sri Lanka Government Employee Sri Lanka Economy of Sri Lanka
By Sathangani Feb 17, 2024 03:08 AM GMT
Report

நாட்டில் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியுள்ளது என பகிரங்க மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார்.

எனவே மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் வேலை நிறுத்தங்களை மேற்கொள்வது நியாயமற்ற செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகளை தூற்றுவதால் மாத்திரம் நாட்டை கொண்டுச் செல்ல முடியாதெனவும், அரச அதிகாரிகள் செயல்திறனுடன் மக்களுக்கு சேவை வழங்க கடமைப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்

அரசாங்க அதிகாரிகள்

அதிபர் ஊடக மையத்தில் நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே​யே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பொருளாதார நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு | 10 000 Rs Subsistence Allowance For Govt Employees

“அரச நிறுவனங்களுக்குள் பெருமளவான அதிகாரிகள் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குகின்றனர். ஆனால் சில அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது தெரியவந்துள்ளது. மக்களுக்கான சேவைகள் உரிய வகையில் வழங்கப்படுவதில்லை என்பதையும் காண முடிகிறது.

சில நேரங்களில் அரச சேவைகளின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கும் அரசாங்க அதிகாரிகள் சிலரது செயற்திறனற்ற செயற்பாடுகளே காரணமாக உள்ளன.

உக்ரைனுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை: முன்னேறும் ரஷ்ய படைகள்

உக்ரைனுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை: முன்னேறும் ரஷ்ய படைகள்

மீறப்படும் மக்கள் உரிமைகள்

அரசியல் அதிகாரத்துக்குள் காணப்படும் பிழைகளை அவர்கள் சுட்டிக்காட்டினாலும், உயர் மட்ட அதிகாரிகள் சிலர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றனர். அரசியல்வாதிகளை தூற்றுவதால் மாத்திரம் நாட்டை கொண்டுச் செல்ல முடியாது. அரச அதிகாரிகள் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காகச் செயற்படவும் முடியாது.

பொருளாதார நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு | 10 000 Rs Subsistence Allowance For Govt Employees

நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு அழைக்கப்படும் போதும் சில அதிகாரிகள் தமக்கு எவ்வித பொறுப்புக்களும் இல்லையென கூறி அழைப்பைப் புறக்கணிக்கின்றனர்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையிலும் மக்கள் உரிமைகள் பெருமளவில் மீறப்படுகிறது. சிறந்த செயலாற்றுவதற்கு வெளிப்படையானதும், நேர்மையானதுமான அரச சேவையொன்று அவசியமாகும்.

வானிலையில் திடீர் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வானிலையில் திடீர் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

10,000 சம்பள அதிகரிப்பு

தற்போதைய நிலைமைகளுக்கு தீர்வுகளைத் தேடும் வகையில் எதிர்வரும் 19ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்தில் அமைச்சுகளின் செயலாளர், மாகாண, மாவட்ட, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட மக்களுடன் நெருக்கமாக பணியாற்றும் அதிகாரிகளுக்கான விசேட செயலமர்வொன்றை நடத்த தீர்மானித்துள்ளோம்.

பொருளாதார நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு | 10 000 Rs Subsistence Allowance For Govt Employees

அதன்போது மக்களுக்கு செயற்திறனுடனும், சிநேகபூர்வமானதுமான சேவையை எவ்வாறு வழங்க முடியும் என்பது குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.

அதேபோல் நெருக்கடியிலிருக்கும் காலத்திலும் அரச ஊழியர்களுக்கு 10,000 சம்பள அதிகரிப்பை அரசாங்கம் பெற்றுக்கொடுத்தது. அவ்வாறிருந்தும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் வேலை நிறுத்தங்களை செய்வதை அனுமதிக்க முடியாது.

தொழிற்சங்க தலைவர் என்ற வகையில் இவ்வாறான வேலைநிறுத்தங்கள் கண்டிக்கத்தக்கவை.” என்று ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்தவிருந்த நபர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்தவிருந்த நபர் கைது



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016