புதையல் தோண்டிய 10 பேருக்கு ஏற்பட்ட நிலை!
arrest
police
people
badulla
By Shalini
ஹப்புத்தளை பிளக்வூட் மற்றும் விஹாரகலை பெருந்தோட்டப் பகுதிகளில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 10 பேரை, பண்டாரவளைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
பண்டாரவளை விசேட குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து, பொலிஸார் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்று இவர்களை சுற்றிவளைத்துள்ளனர்,
இதன்பாேது புதையல் தோண்டிக் கொண்டிருந்த 10 பேரையும், கைது செய்துள்ளனர்.
அத்துடன், குறிப்பிட்ட 10 பேரும் பயணித்த இருவாகனங்களையும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட 10 பேரும் விசாரணையின் பின்னர், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, பண்டாரவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.