அமெரிக்காவில் பயங்கரம் : கத்திகுத்து தாக்குதலில் பலர் கவலைக்கிடம்
அமெரிக்காவின்(us) மிக்சிகனில் உள்ள வால்மார்ட் கடையில் நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர். இதில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் வடக்கு மிச்சிகனில் உள்ள டிராவர்ஸ் நகரில், வால்மார்ட் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்குள் புகுந்த இனந்தெரியாதநபர் ஒருவர் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சரமாரியாக கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தில், 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபர் கைது
தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். அவர் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் நடத்தியவர் ஏதேனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவரா என்று காவல்துறையினர் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், வெளிநாட்டவர்களுக்கு எதிராக இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான உதவி
இந்த மிருகத்தனமான வன்முறைச் செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் எனமிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
