மஹர சிறைக் கைதிகள் 11 பேர் சுட்டுக் கொலை - வெளியான உண்மை நிலவரம்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு கோரி மஹர சிறைச்சாலை கைதிகள் நடத்தி இருந்ததுடன், அதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு 11 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது 11 கைதிகளைக் சுட்டுக் கொன்றது குற்றம் என வெலிசறை நீதிவான் துசித தம்மிக்க உடவவிதான கூறியுள்ளார்.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இரகசிய காவல்துறையினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதவான்
"நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு கலவரத்தை அடக்குவதற்காகவோ அல்லது மனிதாபிமான நடவடிக்கைக்காகவோ நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
இறந்தவர்கள் சுடப்பட்ட விதத்தின் அடிப்படையில், சிறை அதிகாரிகள் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகம் எழுகின்றது.
மஹர சிறைச்சாலையில் கிளர்ச்சியை அடக்குவதற்கு முழங்காலுக்குக் கீழே துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது.
ஆனால் துப்பாக்கி சூட்டில் இறந்த கைதிகள் எவருக்கும் முழங்காலுக்குக் கீழே சூடு நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை." என நீதிபதி கூறியுள்ளார்.
