வீதி விபத்துக்களில் 115 சிறுவர்கள் பலி : சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தகவல்
இந்த ஆண்டில் இதுவரை 115 சிறுவர்கள் வீதி விபத்துக்களில் இறந்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இவ் வருட தொடக்கம் முதல் ஒக்டோபர் 15 வரையில் பதிவாகிய மரணங்களின் அடிப்படையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர், உயிரிழப்புகளுக்கு சாரதிகளின் கவனக் குறைவே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோர்கள் செய்யும் தவறு
இது தொடர்பில் மேலும் கருத்து தெரித்த அவர், "2022ஆம் ஆண்டில் 2,539 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.அத்துடன் இந்த வருடம் 10.15.2023 வரை 1,790 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இதில் 18 வயதுக்குட்பட்ட 129 பேர் உயிரிழந்தனர்.அதேநேரம் 115 சிறுவர்களையும் இழந்துள்ளோம். இது மிகப் கவலைக்குரிய விடயமாகும்.
வீதி விபத்துக்களில் அதிக தொழிலாளர்களை நாம் இழக்கிறோம். மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகம். குறிப்பாக சிறுவர்களும் வீதி விபத்துக்களில் இறக்கின்றனர்.
தாய் மற்றும் தந்தை ஹெல்மெட் அணிந்து தங்கள் மகனையோ மகளையோ நடுவில் வைத்து ஏற்றிச் செல்கிறார்கள்.
நடுவில் செல்லும் அவருக்கு ஹெல்மெட் இல்லை, அன்புள்ளவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் அந்த பிள்ளைக்கே அதிக பாதிப்பு என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
