சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 12 பேர் கைது
Sri Lanka Police
Sri Lanka Refugees
Mannar
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
படகுமூலம் சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 12 பேர் மன்னார் கடல்பரப்பில் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் வசித்துவரும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்.
அவர்களில், 5 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அவர்களை இந்தியாவுக்கு சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற 2 படகோட்டிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க, கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
மரண அறிவித்தல்