யாழில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேர் கைது
Indian fishermen
Sri Lanka
India
By Kanooshiya
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 12 கடற்றொழிலாளர்கள் படகொன்றின் மூலம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து நேற்று (27.09.2025) கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
