உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உட்பட 12 பலி
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழழை ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது கீவ் நகரின் மீது தொடர்ச்சியாக ஆறாவது நாளாக நடத்தப்படும் கடுமையான தாக்குதல் என கூறப்படுகிறது.
போர்க்களத்தில் முன்னேற்றம் மந்தமடைந்துள்ள நிலையில், உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
ரஷ்யாவின் ட்ரோன்கள்
கடந்த வாரம் முதல் ஒரு புதிய தந்திரமாக, இரவும் பகலும் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா ஏராளமான ட்ரோன்களை அனுப்பி வருகிறது.

Image Credit: abcnews
அவற்றில் பல ட்ரோன்கள் இடைமறிப்பதற்கு கடினமான மற்றும் வேகமாகப் பறக்கக் கூடிய புதிய ஜெட்-இயந்திர மாதிரிகளை கொண்டுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இரவு நேரத் தாக்குதல்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தொடருந்து உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு
இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட 8 பேரில் பெரும்பாலானோர் தொடருந்து தொழிலாளர்கள் என்றும் தலைநகருக்கு வெளியே உள்ள போரிஸ்பில் நகரில், குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றைய 4 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Image Credit: nytimes
உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியக் குடிமகன் அடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |