சீனக் கப்பல்களில் ரகசிய உளவுச் சாதனங்கள்! அமெரிக்கா அம்பலப்படுத்திய திடுக்கிடும் தகவல்
சீனாவின் அரசாங்கத்திற்குச் சொந்தமான கொஸ்கோ (COSCO) கப்பல் போக்குவரத்து நிறுவனம் தனது சரக்குக் கப்பல்களில் மறைமுக உளவுச் சாதனங்களைப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் இராணுவத் தொடர்பாடல்களை இடைமறித்துக் கண்காணிப்பதற்காக இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியப் பிராந்தியங்களில் இயங்கும் வெளிநாட்டு இராணுவக் கப்பல்கள் மற்றும் விமானங்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதற்குப் பயன்படுவதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் தரவு
குறிப்பாக, அதிநவீன இராணுவத் தொடர்பாடல் நுட்பங்கள் மற்றும் பாதுகாப்புத் தரவுகளைப் திரட்டுவதையே இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை வொஷிங்டனிலுள்ள சீனத் தூதரகம் முற்றிலும் நிராகரித்துள்ளதுடன் சீன நிறுவனங்கள் எவையும் இவ்வாறான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், குறித்த கொஸ்கோ நிறுவனம் சீன இராணுவத்துடன் தொடர்பைக் கொண்டுள்ளதாகக் கூறி அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதனைத் தடைப்பட்டியலில் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |