இலங்கைக்காக குரல் கொடுக்கும் உலகின் 120 பொருளியல் நிபுணர்கள்!
டித்வா புயல் நிலைமையால் ஏற்பட்ட பேரழிவைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் கடன் கொடுப்பனவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு 120 பொருளாதார வல்லுநர்கள் இணைந்த குழு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளது.
அதன்படி, இவ்வாறு பொது வேண்டுகோளை முன்வைத்த விஞ்ஞானிகளில் நோபல் பரிசு வென்ற உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸூம் உள்ளடங்குகின்றார்.
குறித்த பொருளாதார வல்லுநர்களால் கோரிக்கை முன்வைத்து வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி, சர்வதேச ஆங்கில ஊடகமொன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
விடுக்கப்பட்ட கோரிக்கை
இவ்வாறு பொருளாதார வல்லுநர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
“தற்போதைய அவசரநிலை காரணமாக இலங்கை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மேலதிக கடனைப் பெற்றுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் இலங்கை அதிக கடன்களைப் பெற வேண்டியிருக்கும்.
இதன்காரணமாக, கடன் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட வேண்டும்
இதேவேளை, டித்வா பேரழிவிற்குப் பிறகு இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தேவையான நிதி இடத்தை வழங்க கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |