வலுவான பொருளாதார நிலையை அடைந்த பின்பே 13 குறித்து சிந்திக்கலாம் - சாகர காரியவசம்
13th amendment
Sri Lanka Parliament
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sagara Kariyawasam
By Nithusan
நாடு வலுவான பொருளாதார நிலையை எட்டிய பின்பே 13ஆவது திருத்தத்தை விஸ்தரிப்பது குறித்து சிந்திக்க முடியும் என்ற யோசனையை அரசிற்கு முன்வைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,
“13ஆவது திருத்தத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு இது பொருத்தமான தருணமில்லை என்ற கட்சியின் நிலைப்பாட்டை விரைவில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரியப்படுத்துவோம்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக உள்ள பொதுஜன பெரமுனவின் பிரிவும் இந் நிலைப்பாட்டையே ஆதரித்துள்ளது.
13 க்கு இணங்கினால் அரசிற்கு அழுத்தம்

பலவீனமான பொருளாதார நிலை காரணமாக அரசாங்கமே நெருக்கடியான நிலையில் உள்ள இந்த தருணத்தில் அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை விஸ்தரிப்பதற்கு இணங்கினால் அரசாங்கம் தேவையற்ற அழுத்தத்திற்குள்ளாகலாம்” என்றார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி