ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
இந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் 22 நாட்களில் 138,730 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 31,734 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில் இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 23 சதவீதம் ஆகும்.
அதிக சுற்றுலாப் பயணிகள்
அத்துடன், சீனாவிலிருந்து 8,484 பேரும், பிரித்தானியாவில் இருந்து 14,959 பேரும், நெதர்லாந்திலிருந்து 8,415 பேரும் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஜூலை 22 வரை மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,285,303 ஆகப் பதிவாகியுள்ளது.
அவர்களில் இந்தியாவிலிருந்து 325,417 பேரும், பிரித்தானியாவில் இருந்து 123,526 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் நாட்டிற்கு கிடைத்த வருமானம் 475.6 பில்லியன் ரூபாயாகும்.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை வருமானமாக 50.5 பில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |