மலையகத்தை உலுக்கிய 14 மாத குழந்தையின் மரணம்: கதறி துடிக்கும் தாய்
ஹட்டனில் (Hatton) தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பின்மையினால் 14 மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் ஹட்டன் - ஷெனன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த தாய், “குழந்தை சுகவீனம் காரணமாக வாந்தி எடுத்த நிலையில், குழந்தையை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்.
தனியார் வைத்தியசாலை
இருப்பினும், அங்கு வைத்தியர் இல்லாத காரணத்தினால் குழந்தைக்கு சிகிச்சை அழிக்கப்படவில்லை.
பின்பு ஹட்டனிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாரான போது அதற்கான வாகன வசதியும் இருக்கவில்லை.
இருப்பினும், அக்கம் பக்கத்தில் இருந்த மக்களின் உதவியுடன் லொறி ஒன்றின் ஊடாக குழந்தையை ஒரு தனியார் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றோம்.
குழந்தைக்கு மருத்துவம்
இருப்பினும், அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது.
இதையடுத்து, குழந்தைக்கு சிகிச்சை அளிக்காமையினால் வைத்தியசாலையில் இருந்து வெளியில் வரும் போதே குழந்தை உயிரிழந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பின்மையினால்தான் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்து உயிரிழந்த குழந்தையின் உடலத்துடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
