கிளிநொச்சியில் தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட சிறுமி : தலைமறைவான சந்தேக நபர்
கிளிநொச்சியில் (Klinochchi) அக்காவின் காதலானால் 14 வயது சிறுமி தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டு்ள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த தகவல் காவல்துறையினருக்கு பரிமாறப்பட்டு கிளிநொச்சி காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி
அத்துடன், கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அவளது அக்காவின் காதலனால் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படடுள்ளதாகவும் கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 2 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)