2460 நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்)

Tamils Vavuniya M. A. Sumanthiran Ranil Wickremesinghe Tamil diaspora
By Shadhu Shanker Nov 15, 2023 09:48 AM GMT
Report

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான தொடர்ச்சியாக 2460 நாளாக போராட்டம் நடைபெறுகிறது. 

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் முன் எ-9 வீதியில்  பந்தலொன்றில் இப்போராட்டம் நடைபெறுகிறது.

இன்று(15) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஊடக சந்திப்பை மேற்கொண்ட சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

இடிந்து விழுந்த சுவர்: மாணவி மரணம்! பாடசாலையொன்றில் நடந்த விபரீதம் (காணொளி)

இடிந்து விழுந்த சுவர்: மாணவி மரணம்! பாடசாலையொன்றில் நடந்த விபரீதம் (காணொளி)

 இனப்படுகொலை

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

''1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, இராணுவமும், ராஜபக்சாக்களும் இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் என்பதை ரணில் ஒப்புக்கொண்டார்.

2460 நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்) | 1500 Million Rupees Rejected By Missing Relations

1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்களுக்கு ரணிலின் லஞ்சம். சமீபத்திய வரவு செலவுத் திட்ட அறிவிப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ரணில் 1500 மில்லியன் ரூபாவை ரணில் ஒதுக்கினார், அது தோராயமாக நான்கரை இலட்சம் அமெரிக்க டொலர்களாகும்.

எவ்வாறாயினும், இந்த தொகையைக் கொண்டும் கொழும்பு-7 கறுவாத்தோட்டத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கூட வாங்க முடியாது. இது ஒரு மூடிமறைப்பு.

தாய்மார்களாகிய நாங்கள் அரசாங்கத்திடம் நிதி உதவியை நாடவில்லை. எங்கள் குழந்தைகளின் இருப்பிடம் குறித்து கண்டறிவதே எங்கள் முதன்மையான கவலை.

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இருந்து 12 முதல் 18 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளை இலங்கை இராணுவமும் தமிழ் துணை இராணுவக் குழுக்களும் கடத்தி சென்றுள்ளனர்.

பௌத்த பிக்குகள்

இந்த இளைஞர்கள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டும், அடிமைத் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார். (பிளேக் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளின் பதிவு எம்மிடம் உள்ளது.)

2460 நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்) | 1500 Million Rupees Rejected By Missing Relations

இலங்கையில் எஞ்சிய சில தமிழ் குழந்தைகள் பிக்குகளாக (பௌத்த பிக்குகள்) ஆக நிர்பந்திக்கப்பட்டனர், மற்றவர்கள் சிங்கள தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டனர்.

ரணிலின் எம்மை ஏமாற்றும் முயற்சி வெற்றியடையாது. காணாமல் ஆக்கப்பட எமது பிள்ளைகளை கண்டறிவதற்காக கைது செய்யும் அதிகாரத்துடன் கூடிய நம்பகமான சர்வதேச விசாரணையை நாங்கள் வலியுறுத்துகிறோம். சிங்கள அரசியல்வாதிகள் மீதும் அவர்களின் நீதித்துறை மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

நீதிபதி சரவணராஜா

இலங்கையின் நீதித்துறையின் செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீதிபதி சரவணராஜாவைத் தேடி, அவருடன் கேளுங்கள்.

இராணுவம், காவல்துறை, சிங்கள அரசியல்வாதிகள், சிங்களக் குண்டர்கள் மற்றும் அரசாங்கத்தினால் மிரட்டப்பட்ட நீதிபதி சரவணராஜா தனது பாதுகாப்புக்கு பயந்து தீவை விட்டு வெளியேறினார்.

2460 நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்) | 1500 Million Rupees Rejected By Missing Relations

தற்போது, ​​அவர் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. ரணில் நம்பத்தகுந்தவர் இல்லை, ஒரு பைசாக்கு கூட விலை மதிப்பு இல்லாதவர் . அவர் சதி கோட்பாடுகளை நம்புபவர் மற்றும் எவராலும் நம்பத்தகாதவர்.

அவர் தனக்குள் இருக்கும் குணத்தை வெளிப்படுத்தும் விளையாட்டாக இதை முன்வைக்கிறார், ஆனால் அவரது உண்மையான எண்ணம் காணாமல் போன எங்களின் தமிழ் குழந்தைகளைக் கண்டறியும் எங்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் இருந்து நம்மை நிறுத்தும் முயற்சியே.

தமிழ்ப் புலிகளிடம் இருந்து கருணாவை பிரிக்கும் சதித்திட்டத்திற்குக் காரணமான ரணில் என்ற நபரை நாம் நன்கு அறிவோம். சுமந்திரனின் துணையுடன் தமிழர் தாயகத்தில் 1000 விகாரைகள் அமைப்பதற்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியவரும் ரணில்தான்.

ரணில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பயன்படுத்தி ரணில் 4000 சிங்களக் குடும்பங்களை வவுனியா நெடுங்கேணியில் வெற்றிகரமாகக் குடியமர்த்தினார்.

பணத்திற்காகவே ரணிலை களமிறக்கினோம்: மகிந்த வெளிப்படை

பணத்திற்காகவே ரணிலை களமிறக்கினோம்: மகிந்த வெளிப்படை

உலகளாவிய விழிப்புணர்வு

மேலும், இலங்கையில் பௌத்தத்தை முதன்மையான மதமாக ஏற்றுக்கொள்ளுமாறு சுமந்திரனை மூலம் அவர் நாடாளுமன்றத்தில் இதனைப் பிரகடனப்படுத்தி உலகளாவிய விழிப்புணர்வை உறுதி செய்தார்.

மேலும், சுமந்திரனால் முன்மொழியப்பட்ட கொள்கையான "எக்கிய ராஜ்ஜா" என்ற கருத்தை அங்கீகரிக்க ரணில் TNAக்கு செல்வாக்கு செலுத்தினார்.

2460 நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்) | 1500 Million Rupees Rejected By Missing Relations

"எக்கிய ராஜ்ஜா" என்ற கருத்துக்குள் மறைமுகமாக சமஷ்டி மறைக்கப்பட்டுள்ளது என்று சுமந்திரனை கூற வைத்தவர் ரணில், கடைசியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ரணில் வற்புறுத்தி, TNA யை ஏற்று கொள்ள வைத்தவர் ரணில்.

"அலகை" அடிப்படையிலான சந்திரிகாவின் அரசியலமைப்புப் பிரேரணையை ரணில் எதிர்த்து, நாடாளுமன்றத்தில் எரித்தார்.

ரணில் மிகவும் திறமையான திட்டமிடுபவர், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவருடைய திட்டங்களில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்.

நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, அவர் சொல்வதையெல்லாம் நிராகரிக்க வேண்டும். இந்த மூலோபாயத்தைப் பயன்படுத்துவதன் மூலம், வரவிருக்கும் பேரழிவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். தமிழருக்கு ஒரே தீர்வு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அணுகி உதவி பெறுவதுதான்.” என்றார்.

GalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019