கனடாவில் தெற்காசியர்களை குறிவைத்த சர்வதேச குற்றவலை! 17 புலம்பெயர்ந்தோர் அதிரடி கைது
கனடா மற்றும் அமெரிக்கா முழுவதும் தெற்காசிய வணிக உரிமையாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களைக் குறிவைத்த ஒரு சர்வதேச குற்ற வலையமைப்பின் அங்கங்களாக இருந்ததற்காக 17 பேரைக் கனேடிய காவல்துறை கைது செய்துள்ளது.
குறித்த தரப்பினர் மீது மிரட்டிப் பணம் பறித்தல், துப்பாக்கிச் சூடு, தீவைப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொராண்டோவின் பீல் காவல்துறை ஒரு அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் 'ஃபார் பிரதர்ஸ்' என்று அழைக்கப்படும் ஒரு சர்வதேச குற்ற வலையமைப்பின் அங்கத்தினர்கள் என்று கூறியுள்ளது.
காவல்துறை தகவல்
மேலும், உள்ளூர் வணிகர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் அதிகரித்து வரும் வன்முறை ஆகியவற்றைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை இந்த விசாரணை முறியடித்ததாகவும் அது கூறியுள்ளது.

கனடாவின் பிராம்ப்டன், மிசிசாகா, காலேடன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய இடங்களிலும், அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும் தெற்காசிய சமூகத்தினருக்கு எதிராக நடத்தப்பட்ட தொடர்ச்சியான இலக்குத் தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தோரை வெளிநாட்டு ஆயுதக் குழுக்கள் குறிவைக்கும் சமீபத்திய சம்பவம் இதுவாகும். சமீப ஆண்டுகளில், புலம்பெயர்ந்தோர் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் அடிக்கடி குறிவைக்கப்பட்டு வருகின்றனர்.
கோயில்களும் அடிக்கடி சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிறையில் உள்ள இந்தியக் குண்டர் லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புடைய பிஷ்னோய் கும்பல் போன்ற, தனது மண்ணில் செயல்படும் சர்வதேசக் குற்ற வலையமைப்புகள் மீது கனடா கடும் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் இந்த கைது சம்பவம் பதிவாகியுள்ளது.
Extortion Task Force Takes Down International Criminal Group Targeting South Asian Communityhttps://t.co/C0KbPLkvGN pic.twitter.com/9QNzoMqR6l
— Peel Regional Police (@PeelPolice) May 25, 2026
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் எவரும் கனடிய குடிமக்கள் அல்ல என்று பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |