நைஜீரியாவில் இராணுவப் பயிற்சிப் பாடசாலை மீது தாக்குதல்: 17 பயிற்சி காவல்துறையினர் பலி
நைஜீரிய இராணுவப் பாடசாலை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 17 பயிற்சி காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோபேயில் உள்ள சிறப்பு இராணுவப் பயிற்சிப் பாடசாலை ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதம் நீடித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
துல்லியமான எண்ணிக்கை
யோபே மாநிலத்தின் புனி யாடி பகுதியில் அமைந்துள்ள நைஜீரிய இராணுவத்தின் சிறப்புப் படைப் பாடசாலை மீது, பயங்கரவாதிகள் பல திசைகளில் இருந்தும் ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் அந்தோணி ஒகோன் பிளாசிட் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் காவல்துறையினருடன் இணைந்து பல இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இராணுவத் தரப்பு உயிரிழப்புகளின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |