வவுனியா சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை
Vavuniya
Sri Lanka
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Sathangani
தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் 350 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இன்று (12) வவுனியா (Vavuniya) விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து17 கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 8 பேர் வேறு குற்றங்களுக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரவிக்கப்படுகின்றது.
பொது மன்னிப்பின் கீழ் விடுதலை
சிறிய குற்றங்கள் மற்றும், சிறிய அபாராத தொகையைச் செலுத்த தவறிய சிறைக்கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு இன்று (12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்