கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: கடற்தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்விபத்து வட அட்சரேகை 06 54' மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32' அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
தற்போதைய கடல் நீரோட்டத்தின் அடிப்படையில், இந்த கொள்கலன்கள் பேருவலை, நீர்கொழும்பு வழியாக புத்தளம் வரை உள்ள கடலோரப் பகுதிகளை நோக்கி கரையொதுங்கும் சாத்தியம் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலில் மிதக்கும் 17 சரக்குக் கொள்கலன்கள்
இதனால், அந்தக் கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள பலநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மிதக்கும் கொள்கலன்களில் ஏதேனும் ஒன்றைக் காணும் மீனவர்கள் மற்றும் மாலுமிகள், உடனடியாக மீன்வளம் மற்றும் நீர்வள ஆதாரங்கள் துறையின் வானொலித் தொடர்பு மையத்திற்குத் தெரிவிக்குமாறு அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், கடலில் மிதந்து வரும் இந்தக் கொள்கலன்கள் எங்காவது தென்பட்டால், உடனடியாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள கடற்தொழிலாளர் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்களும் கடற்தொழிலாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |