யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி உயிரிழப்பு!
யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அமிர்தலிங்கம் கீர்த்திகா ( வயது 17) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமி வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட மூளாய் - ஆலடி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், நேற்று (24) காலை வீட்டில் குறித்த சிறுமி தவறான முடிவெடுத்த நிலையில் தாயார் பார்வையிட்டுள்ளார்.

இதன்பின்பு, அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்து திரும்பி சென்றுள்ளது.
சிறுமியின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |