காலி சிறைச்சாலை சோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Dilakshan
காலி சிறைச்சாலையின் A,B மற்றும் C,D ஆகிய சிறைக்கூடங்களில் நேற்று (03) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் போதைப்பொருட்களை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது 19 கையடக்கத் தொலைபேசிகளும், 11 சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 4 கிராம் 384 மில்லிகிராம் நிறையுடைய 58 சிறிய பொதிகளில் பொதியிடப்பட்ட ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக நடவடிக்கைகள்
அதேநேரம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு பொதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறைச்சாலை தலைமையகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
அத்துடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
1 நாள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி