தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல்

India Law and Order World
By Shalini Balachandran Feb 04, 2026 03:09 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இந்தியா
Report

தமிழ்நாட்டை உலுக்கிய அஜித்குமார் மரணம் தொடர்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக அஜித்குமார் (வயது 29) என்பவர் பணியாற்றி வந்தார்.

கடந்த ஜூலை மாதம் அவர் மீது நிகிதா என்ற பேராசிரியை, நகை திருட்டு என முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தார்.

பல்கலை அனுமதிக்கு நாமல் வழங்கிய சிபாரிசு கடிதம்! சபையில் போட்டுடைத்த பிமல்

பல்கலை அனுமதிக்கு நாமல் வழங்கிய சிபாரிசு கடிதம்! சபையில் போட்டுடைத்த பிமல்

காவல்துறையினர் 

இது தொடர்பான விசாரணைக்காக அஜித்குமாரைத் தனிப்படை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இந்தநிலையில், பல்வேறு இடங்களுக்கு அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல் | Ajith Kumar Death Police Attack Tamil Nadu

இவ்வாறு, படுகாயமடைந்த அஜித்குமார் இறந்துவிட்டதாகத் தெரியவர, பாரிய சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அஜித்குமாரின் மரணம் தொடர்பில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய மானாமதுரையைச் சேர்ந்த தனிப்படை காவல் உத்தியோகத்தர்களான கண்ணன், பிரபு, ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன் மற்றும் காவல்துறை வாகன சாரதி ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

GovPay செயலி மூலம் அபராதம் செலுத்திய 46,000 சாரதிகள்

GovPay செயலி மூலம் அபராதம் செலுத்திய 46,000 சாரதிகள்

மனு தாக்கல் 

இந்தநிலையில், அஜித்குமார் மரணம் குறித்த வழக்கை சிபிஐ (CBI) விசாரித்து வருகின்றது.

சமீபத்தில் இந்த வழக்கில், தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல் | Ajith Kumar Death Police Attack Tamil Nadu

இதில் மானாமதுரை காவல்துறை டிஎஸ்பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் அதிகாரி மற்றும் துணை காவல் அதிகாரி உள்ளிட்ட மேலும் நான்கு காவல்துறையினரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால் அஜித்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஐந்து பேர் பிணை கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (04-02-2026) நடைபெற்ற நிலையில், அப்போது சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அனுர அரசாங்கத்தை புகழ்ந்து தள்ளும் மகிந்தவின் சகா

அனுர அரசாங்கத்தை புகழ்ந்து தள்ளும் மகிந்தவின் சகா

மரண வழக்கு

இதன்போது, நீதிபதி நிகிதா அளித்த முறைப்பாடு சரியானதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குச் சிபிஐ தரப்பில் நிகிதா அளித்த முறைப்பாட்டில் உண்மை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் நாட்டை உலுக்கிய அஜித்குமார் வழக்கு...! நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல் | Ajith Kumar Death Police Attack Tamil Nadu

இந்தநிலையில், அஜித்குமார் உயிரிழப்பு காவல் மரணம் என்பது உறுதியாகியிருக்கிறது எனச் சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கருத்துத் தெரிவித்த நீதிபதி, “ஒன்றுமே இல்லாத வழக்கில் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இப்படி அடித்த காவல்துறையினருக்குப் பாடம் புகட்ட வேண்டும், அஜித்குமார் மரண வழக்கில் யாராக இருந்தாலும் வழக்கு முடியும் வரை உள்ளேயே இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026