GovPay செயலி மூலம் அபராதம் செலுத்திய 46,000 சாரதிகள்
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட "GovPay" செயலி மூலம், 2025 ஆம் ஆண்டில் 40,000 க்கும் மேற்பட்ட சாரதிகள் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, மொத்தம் 46,635 சாரதிகள் அபராதத் தொகையை "GovPay" செயலி ஊடாகச் செலுத்தியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 11,715 சாரதிகள் இந்தச் செயலி மூலம் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளனர்.
டிஜிட்டல் முறைமை
வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் அதிகளவான தொகை அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவினால் ஈட்டப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

டிஜிட்டல் முறைமையிலான இத்தகைய கொடுப்பனவுகள் சாரதிகளுக்கு நேர விரயத்தைக் குறைப்பதுடன், அபராதங்களைச் செலுத்தும் நடைமுறையை மேலும் எளிதாக்கியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |