யாழில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மறவன்புலவு - அறுகுவெளி பகுதியில் வைத்து பெருமளவு போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தலைமையிலான குழுவினரால் குறித்த பகுதியில் நேற்றிரவு (11) விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரிடம் மேற்கொண்ட சோதனையின் போது பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 284 கிலோ 415 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
7 கோடி ரூபாவுக்கும் அதிகம்
கைப்பற்றப்பட்ட குறித்த கஞ்சாவின் பெறுமதி 7 கோடி ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்
