யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து சிறப்பு தொடருந்து
'கிளீன் சிறிலங்கா' சுத்தமான இலங்கை திட்டம் என்ற தொனிப்பொருளில் இன்று கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சிறப்பு தொடருந்து ஒன்று சென்றது.
யாழ்ப்பாணம் (Jaffna) மக்களிடையே சுத்தமான இலங்கை திட்டத்தை ஊக்குவிக்கும் ஒரு திட்டத்தை 'கிளீன் சிறிலங்கா' செயலகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த திட்டம் இன்று (13.08.2025) முதல் ஒரு வாரத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும்.
சுத்தமான இலங்கை திட்டம்
ஆரம்ப விழா இன்று 'கிளீன் சிறிலங்கா' செயலகத்தின் தலைவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுவிஸ்வர தலைமையில் நடைபெற்றது.
கல்கிஸ்ஸயிலிருந்து புறப்பட்ட தொடருந்து காலை 6:20 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைந்து, காலை 6:40 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டது.
சுற்றுச்சூழல், சமூக மற்றும் நெறிமுறை மாற்றம் மற்றும் தேசிய அளவிலான உறுதிமொழிகள் மூலம் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்
