இத்தாலியில் துயர சம்பவம் - இலங்கையரான தந்தை,மகன் பரிதாபகரமாக உயிரிழப்பு
இத்தாலியில் இடம்பெற்ற கோர சம்பவத்தில் இலங்கையர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 60 வயதான தந்தையும் 25 வயதுடைய மகனுமே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வென்னப்புவ பொலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த துலாத் மற்றும் அவரது தந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்
இத்தாலியில் தமது உறவினர்களுடன் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.இதன்போது ஆற்றில் குளித்த மகன் நீரில் மூழ்குவதை அவதானித்த தந்தை, மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.
ஆற்றில் குளித்தவேளை துயரம்

எனினும், இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அங்கு சென்ற அந்நாட்டு படையினரால் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
தந்தை மற்றும் மகனின் சடலங்கள் மிலனில் உள்ள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் நேற்று 9ஆம் திகதி நடைபெறவிருந்தன.
உயிரிழந்த இளைஞர் இத்தாலியில் உள்ள கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்.
பிரேத பரிசோதனை மற்றும் அவசர விசாரணைகளின் பின்னர் தந்தை மற்றும் மகனின் சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 53 நிமிடங்கள் முன்