பாதாள உலகக் கும்பலிடம் சம்பளம் வாங்கிய 200 காவல்துறை அதிகாரிகள்: உளவுத்துறையினர் விசாரணை
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து மாதாந்தம் சம்பளம் பெற்று வந்ததாக தெரிவிக்கப்படும் சுமார் 200 காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ளமை குறித்து அரசாங்கத்தின் உளவுத்துறையினர் பரந்த அளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணிய சுமார் பத்து அதிகாரிகள் இதுவரையில் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.
நெருங்கிய தொடர்பு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக அடையாளம் காணப்பட்ட மேலும் ஆறு அதிகாரிகள் தொடர்பான விசேஷ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அவர்கள் பற்றிய விபரங்கள் கடந்த வாரம் உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை ஒடுக்குவதற்கு இவ்வாறான ஊழல்வாதிகளான அதிகாரிகள் பெரும் தடையாக இருக்கின்றனர்.
ஊழல் அதிகாரிகள் மற்றும் கடத்தல்காரர்களுக்கு இடையிலான இந்த சட்டவிரோத வலையமைப்பை உடைப்பதற்காக கல்பிட்டி உட்பட சில காவல் நிலையங்களின் அனைத்து அதிகாரிகளையும் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படை
இதேவேளை பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் (STF) முன்னாள் கட்டளை அதிகாரியும் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருமான (SDIG) வருண ஜயசுந்தரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அண்மையில் விசாரணை நடத்தியுள்ளது.
அங்கு சுமார் நான்கு மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு அவரே விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலுள்ள பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பை முழுமையாக ஒழிப்பதற்காக காவல் திணைக்களத்திற்குள் இருக்கும் கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்