போலந்தை இலக்கு வைத்தது ரஷ்யா! அமெரிக்க உளவுத்துறை தகவலால் பதற்றம்
ரஷ்யாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை தொடர்ந்து, போலந்து பாதுகாப்புச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக அந்நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் அறிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பின் தற்காப்பு உறுதியைச் சோதிப்பதற்காகப் போலந்து எல்லைக்குள் ரஷ்ய அத்துமீற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளதை தொடர்ந்து அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், போலந்து மீது தாக்குதல் நடத்தப்படும் சதித்திட்டம் குறித்து வார்சா நகருக்கு அமெரிக்கா பலமுறை எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய சதியின் நோக்கம்
அதன்படி, போலந்தின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதல்களை நடத்த அல்லது நேட்டோ எல்லைக்குள் ரஷ்ய வீரர்களை ஊடுருவச் செய்யத் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Image Credit: PBS
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி வரும் ராணுவ உதவிகளை நிறுத்த வைப்பதற்காக அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே இந்தச் சதியின் நோக்கம் என்றும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்