வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 121 வாக்குகளும் 84 எதிராக வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஒருவர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் கடந்த 14ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு, கடந்த 7 நாட்களாக இடம்பெற்ற விவாதத்தைத் தொடர்ந்து இன்றைய தினம் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
இன்றைய வாக்கெடுப்பின்போது - சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியினர் எதிராக வாக்களித்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பை புறக்கணித்தது.
எவ்வாறாயினும், சிறிலங்கா பொதுஜன பெரமுன வரவு - செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா
