உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பம் கோரல்
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2026 க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள இணைப்பின் ஊடாகக் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் இணையவழி விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்
விண்ணப்பம் கோரல் நேற்று (09) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி விரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க சில குழுக்கள் கோரிய போதிலும், அது திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 17 மணி நேரம் முன்