ரணிலின் குற்றச்சாட்டுக்கு சஜித் பதிலடி
ரணில் குற்றச்சாட்டு
அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.
21வது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இறுதி வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
துரதிஷ்டவசமாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதால் இந்த செயல்முறை தாமதமாகும் என்று அவர் மேலும் கூறினார்.
சஜித் பதிலடி
எனினும் இது தொடர்பில் பிரதமருக்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, பிரதமரால் குறிப்பிடப்பட்ட 21 வது திருத்தம் 9 வது நாடாளுமன்றத்தின் பின்னர் நடைமுறைக்கு வரும் என்று கூறினார்.
இதன் பொருள் தற்போதைய அரச தலைவரின் அதிகாரம் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை என்றும் தற்போதைய சூழ்நிலையில் எந்த விளைவும் இல்லை என்றும் அவர் விளக்கினார், அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி இது தொடர்பில் எந்த தாமதத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறினார்.
ராஜபக்சவின் ஆட்சி
ராஜபக்சவின் ஆட்சியின் ஒரு வருடம் முழுவதும் நீங்கள் பதவியேற்கவில்லை, அதாவது கடந்த காலத்தில் ராஜபக்சவின் மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களை குறைக்க நீங்கள் முயற்சிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
எனவே பிரதமர் விக்ரமசிங்க அதனை முன்னெடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கை இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.