ரி20 உலககிண்ண தொடர் : இந்தியா திரில் வெற்றி : இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது
ரி20 உலககிண்ண தொடரில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 07 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதன்படி இந்திய துடுப்பெடுத்தாடியது. இந்திய அணி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ஓட்டங்கள் எடுத்தது
சதமடித்து அசத்திய பெத்தேல்
பதிலுக்கு 254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 246 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

அவ்வணி சார்பாக நிலைத்து ஆடிய பெத்தேல் சதமடித்து அசத்தினார். கடைசி வரை போராடிய அவர் 105 ஓட்டங்களில் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி வரும் 8ம் திகதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |