யாழில் யுவதியொருவரிடம் பாலியல் சேட்டை! இராணுவ கப்டன் அதிரடி கைது
யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவரிடம் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் இராணுவ கப்டன் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில், பயணித்த யுவதியிடம் ஒருவர் அங்க சேட்டை புரிந்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி, யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியதை அடுத்து, விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் ஆரியகுளம் பகுதியில் வைத்து பேருந்தை மறித்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கோட்டாக்கு எதிராக CIDயில் முறைப்பாடு: வரலாற்று சிறப்புமிக்க விகாரையில் அரிய இரத்தினக்கற்கள் திருட்டு
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் 09ஆவது காலாட்படை பிரிவை சேர்ந்த கப்டன் தர அதிகாரி என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபரை யாழ்ப்பாண காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்