வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் வெளிவந்த தகவல்
இலங்கையில் தற்போது 22 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
136 நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து 1,785 பேரும், கனடாவில் இருந்து 2,295 பேரும், பிரான்சில் இருந்து 1,310 பேரும், ஜெர்மனியில் இருந்து 1,883 பேரும், இந்தியாவில் இருந்து 2,569 பேரும், ரஷ்யாவில் இருந்து 1,392 பேரும், பிரித்தானியாவில் இருந்து 2,397 பேரும், அமெரிக்காவிலிருந்து 1,379 பேரும் சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு சென்றுள்ளனர்.
136 நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை
தற்போது இலங்கையில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான தேவைகளை ஆராய்ந்து, அவர்களுக்கு வசதி செய்துகொடுப்பதற்கு தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றிவருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.
தற்போதைய நெருக்கடிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் எனவும் அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.