தரையிறங்கும் முன் கைது செய்யப்பட்ட 22 குடியேற்றவாசிகள்
22 immigrants
landing
By Vasanth
இந்தோனேசியாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமான முறையில் மலேசியாவின் Tawau பகுதி வழியாக அந்நாட்டுக்குள் நுழைய முயன்ற 22 இந்தோனேசிய குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு வழியாக வந்த இவர்கள் Jalan Tawau Lama கடற்கரை பகுதியில் தரையிறங்கி புதர்களுக்குள் மறைந்து மலேசியாவுக்குள் செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இந் நிலையில், தரையிறங்குவதற்கு முன்னரே கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. Op Cegah Pati நடவடிக்கையின் கீழ் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாரு கைதான 22 பேரில் 11 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகளாவர்.
இவர்கள் அனைவரும் Tawau மாவட்ட காவல் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்