வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி: கைதான 17 மாணவர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Child Abuse
By Shalini Balachandran Aug 12, 2024 03:04 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மூன்றாம் இணைப்பு

மொனராகலை - தனமல்வில பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (12) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய 17 மாணவர்களில் 14 பேரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

மேலும், மூன்று மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண்ணை ஒகஸ்ட் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இரண்டாம் இணைப்பு

மொனராகலை - தனமல்வில பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருட காலமாக வன்புணர்வுக்கு உட்படுத்திய 17 பாடசாலை மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண்ணும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முதலாம் இணைப்பு

மொனராகலை (Moneragala) மாவட்டம் தனமல்வில பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் 17 பாடசாலை மாணவர்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சில மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ள நிலையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் தனக்கு பலவந்தமாக மதுபானத்தை வழங்கியதாக குறித்த சிறுமி காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தான் கல்வி பயிலும் பாடசாலையிலுள்ள 19 வயதான மாணவனொருவனை சிறுமி காதலித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் தனது காதலனின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு பாடசாலை மாணவர்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்க போவதில்லை : சந்திரிக்கா அறிவிப்பு

தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்க போவதில்லை : சந்திரிக்கா அறிவிப்பு

கர்ப்பமடைந்த சிறுமி 

இந்தநிலையில், சிறுமி குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ள சந்தேகநபர்கள் அந்த காணொளியை வெளியிடுவதாக அச்சுறுத்தி ஒரு வருட காலம் சிறுமியை பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி: கைதான 17 மாணவர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | 22 Students Molested 19 Year Old Student  

மேலும், சிறுமி காதலித்த மாணவன் உள்ளிட்ட மேலும் 16 மாணவர்கள் குறித்த சிறுமியை  வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தமையினால் ராகமை வைத்தியசாலையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர்...!

மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியர்...!

மேலதிக விசாரணை

இந்த சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்துக்கொண்ட பெற்றோர்கள், சிறுமியை ராகமையிலுள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பியுள்ளதோடு சிறுமி குழந்தை பெற்றெடுத்ததை அடுத்து ராகமை வைத்தியசாலை நிர்வாகத்தினால் புத்தல காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி: கைதான 17 மாணவர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | 22 Students Molested 19 Year Old Student

இந்த நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த புத்தல காவல்துறையினர், சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

ஆனைப்பந்தி, சிறாம்பியடி, Toronto, Canada

11 Aug, 2024
மரண அறிவித்தல்

பொன்னாலை, Bielefeld, Germany, Nuremberg, Germany

07 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Münster, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், London, United Kingdom

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Bremen, Germany

01 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு

07 Sep, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

06 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

11 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சூரிச், Switzerland

10 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Mönchengladbach, Germany

05 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவளை, கரணவாய் தெற்கு

07 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில், மீசாலை வடக்கு, Cheam, United Kingdom

11 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Bolton, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Hayes, United Kingdom

09 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, அல்வாய் கிழக்கு

27 Aug, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

07 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், சூரிச், Switzerland

20 Aug, 2023