கிழக்குப் பல்கலையில் நடந்த இனப்படுகொலையின் நினைவுநாள் !

Jaffna Sri Lanka Eastern Province
By Theepachelvan Sep 06, 2024 01:04 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

ஈழ விடுதலைப் போராட்டத்திலும் இனப்படுகொலை வரலாற்றிலும் யாழ்ப்பாண (Jaffna) பல்கலைக்கழகம் வடபுலத்தில் பல அவலங்களின் சாட்சியாக இருக்கிறது.

அதைப்போலவே ஈழத்தின் கிழக்கில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகமும் இனப்படுகொலையின் சாட்சியாக இருக்கிறது.

இனப்படுகொலையின் குருதியில் நனைந்த நமது நாட்காட்டியில் செப்டம்பர் 5 ஆம் நாள் வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகப் படுகொலையின் நினைவேந்தல் நாளாகும் ஒருவரல்ல  இருவரல்ல நூற்றி ஐம்பத்தியெட்டு அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட இந்த நாள் ஈழ வரலாற்றில் ஒரு ஆறாத ரணமாகப் பதிந்துவிட்டது.

ஒரு தலைமுறையை காவு கொண்ட செஞ்சோலைப் படுகொலை…

ஒரு தலைமுறையை காவு கொண்ட செஞ்சோலைப் படுகொலை…

தஞ்சமடைந்த அப்பாவிகள் 

செப்டம்பர் 5 ஆம் திகதி 1990 ஆம் ஆண்டு அன்றைய நாள் போர் சூழலின் பதற்றம் மிகுந்த பொழுதுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள்.

அப்படி கைது செய்யப்பட்ட மக்கள் இலங்கை இராணுவத்தின் கொடூரப் படுகொலைகளினால் அழிக்கப்பட்டனர். கிழக்குப் பல்கலைக்கழத்தின் நிலத்தில் அந்தக் குருதி இன்னமும் காயாமல் இருப்பதைப் போலவே வலிமையான தாக்கம் நீள்கிறது.

கிழக்குப் பல்கலையில் நடந்த இனப்படுகொலையின் நினைவுநாள் ! | Genocide At Eastern University

1990 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்டிருந்தன.

வாழைச்சேனையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி மற்றும் கறுவாக்கேணி போன்ற கிராமங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா பொது வேட்பாளர் தெரிவு...

தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா பொது வேட்பாளர் தெரிவு...

குருதியில் நனைந்த வெள்ளைக்கொடி 

போர்ச் சூழலில் தம்மை பாதுகாக்க ஏற்றப்பட்ட வெள்ளைக் கொடியில் குருதி நனையும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை பல்கலைக்கழக வளாகத்தில் கடமையில் இருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இவர்களைப் பராமரித்து வந்தனர்.

பல்கலைக்கழக முன்றலில் வெள்ளைக் கொடியும் கட்டப்பட்டிருந்ததுடன் முதல் நாள் கைதின் பின்னர் மீண்டும் அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர் இதனை அடுத்து இந்த அகதிகள் முகாமை மூடி விடுமாறும் எஞ்சியுள்ளோரைக் காட்டுப் பகுதிக்குள் செல்லுமாறும் விடுதலைப் புலிகள் கூறியதை அடுத்து முகாம் மூடப்பட்டது.

கிழக்குப் பல்கலையில் நடந்த இனப்படுகொலையின் நினைவுநாள் ! | Genocide At Eastern University

பெரும்பாலான அகதிகள் காட்டுப் பகுதிகளுக்குள் தஞ்சமடைந்தனர் இவர்களில் பலர் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல்களுக்கு இலக்காயினர் ஏனையோர் பின்னர் தமது இருப்பிடம் திரும்பினர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமற்போனோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுவதற்காக நீதிபதி கி. பாலகிஷ்ணர் (K. Balakishnar) தலைமையில் மூன்று பேரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 1994, நவம்பர் 30 ஆம் நாள் அமைத்திருந்தார்.

ஐ.நாவின் அறிக்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் அவலத்தை வெளிப்படுத்தி நிற்கிறது…

ஐ.நாவின் அறிக்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் அவலத்தை வெளிப்படுத்தி நிற்கிறது…

சாட்சியங்கள் சொல்லிய செய்தி 

எல்.டபிள்யூ.ஆர்.ஆர்.வித்தியாரத்தின (L.W.R Vidhyaratna), கலாநிதி டபிள்யூ.என்.வில்சன் (W.N Wilson) ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர் அத்தோடு இக்குழுவின் இறுதி அறிக்கை 1997 செப்டம்பரில் வெளியிடப்பட்டது.

இவ்வறிக்கையின் படி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகக் கைதுகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப் பெரும் குழு முறையிலான கைதுகள் எனத் தெரிவிக்கப்பட்டது.கைது செய்யப்பட்டவர்கள் 158 பேரின் பெயர் விபரங்களும் ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

கிழக்குப் பல்கலையில் நடந்த இனப்படுகொலையின் நினைவுநாள் ! | Genocide At Eastern University

83 பேர் சாட்சியமளித்தனர் இவர்கள் 92 பேரின் கைதுகள் குறித்துச் சாட்சியமளித்திருந்தனர் அத்தோடு இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குறித்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்தது.

குறித்த ஆணைக்குழு சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை விசாரணை முடிவுகளில் உறுதிப்படுத்தியது அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனக்கண்டிருந்தது ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

நீதியை வலுயுறுத்தி ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்…

நீதியை வலுயுறுத்தி ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்…

ஆண்டுதோறும் நினைவேந்தல்  

158 பேரும் கைது செய்யப்பட்ட நாள் ஆண்டு தோறும் மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினமும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இப் படுகொலையின் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கமும் இந்த நிகழ்வை இணைந்து முன்னெடுத்தன இவ் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பது இன்றைய நினைவேந்தலிலும் வலியுறுதப்பட்டது.

கிழக்குப் பல்கலையில் நடந்த இனப்படுகொலையின் நினைவுநாள் ! | Genocide At Eastern University

தமிழ் இன அழிப்பு வரலாற்றில் ஆறாத ரணமாக நிலைத்துவிட்ட கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள்  நடைபெற்று  34 வருடங்கள் கடந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே கசப்பும் கவலையும் பாடம் கற்க மறுக்கும் துன்பியலுமாகும்.

இதையெல்லாம் மறைத்து மறந்ததுபோல நடித்து ஆட்சிபுரிகின்ற அரசு தாம் இழைத்த கொடுமைகளின் அநீதியை அறிகின்ற நாட்களில்தான் சிறிலங்காவுக்கு (Sri Lanka) மெய்யான அமைதியும் நிம்மதியும் சாத்தியமாகும் என்பது புலனாகிறது. 

நாம் உயிரோடு இருக்கும்போதே நீதியை தாருங்கள்… ஈழத் தாய்மாரின் குரலை கேட்குமா உலகம்....

நாம் உயிரோடு இருக்கும்போதே நீதியை தாருங்கள்… ஈழத் தாய்மாரின் குரலை கேட்குமா உலகம்....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 06 September, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

Atchuvely, பிரான்ஸ், France

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Markham, Canada

16 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Kirchheim Unter Teck, Germany

16 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
31ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, மலேசியா, Malaysia

09 Sep, 2019
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தனங்கிளப்பு, உருத்திரபுரம், பெரியமாவடி, மடத்தடி, மீசாலை, Toronto, Canada

27 Aug, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022