இந்திய கடற்றொழிலாளர்கள் 3 பேர் கைது: யாழில் தொடரும் அத்துமீறல்கள்
Jaffna
Fishing
Sri Lanka Fisherman
Fish Price In Srilanka
Arrest
By Thulsi
அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்தை கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இன்று (28) அதிகாலை குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
படகு பறிமுதல்
இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் கரைக்கு அழைத்து வரப்படும் நிலையில், அவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்