கனடாவின் முக்கிய பகுதியில் கத்தி குத்து தாக்குதல்:மூவர் பலி
கனடாவின் (Canada) மொன்றியாலில் இடம்பெற்ற கத்தி கத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவமானது மொன்றியாலின் பிலாட்டியு மொன்ட் றோயல் போரோவ் (Montreal's Plateau-Mont-Royal borough) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 15, 23 மற்றும் 25 வயதான நபர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் தப்பியோட்டம்
ராச்செல் மற்றும் செயின்ட் அன்ட்ரே வீதிகளுக்கு இடையில் குறைந்தபட்சம் பதினைந்து பேர் மோதிக் கொண்டதாக 911 என்ற காவல்துறை அவசர அழைப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மோதலுடன் தொடர்புடையவர்களே கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் குறித்த நகரில் இடம்பெற்ற 14ம், 15ம் மற்றும் 16ம் மரணங்கள் இவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 3 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)