மட்டக்களப்பு - குடும்பிமலைப் பகுதியில் மீட்கப்பட்ட மூன்று ரொக்கட் லோஞ்சர்கள்
Sri Lanka Police
Batticaloa
Crime
By Independent Writer
நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான மூன்று ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ஆயுதங்கள் நேற்று (06.02.2026) மட்டக்களப்பு - குடும்பிமலைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குடும்பிமலைப் பகுதியில் அரங்கலாவ விசேட அதிரடிப்படையினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி