30 ஆண்டுகாலப் போர் - கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் - 2009 இல் அரங்கேறிய கொடூரம்
30 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போருக்கான அடிப்படைக் காரணங்கள் பெரும்பாலும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
பிரதிநிதிகள் சபையில் ( 117TH CONGRESS - 2D SESSION) அவர் சமர்ப்பித்துள்ள தீர்மானத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
''2009 இல் போரின் இறுதி தருணங்களில் மிகத் தீவிரமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பலவந்தமாக கொல்லப்பட்டனர்.
பலர் காணாமல் காணாமல் ஆக்கப்பட்டனர். 2009 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் விஜயத்தின் முடிவில், இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள் பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவது குறித்து உத்தரவாதம் அளித்தனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்