நிலச்சரிவால் மண்ணுக்குள் புதையுண்ட 35 மாணவர்கள்! கல்விப் பணிப்பாளரின் அதிர்ச்சி அறிக்கை
கண்டி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகூன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று (07) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் 97,850 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாத்தளை மாவட்டத்தில் 8,500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
627 பேர் உயிரிழப்பு
நேற்று (07) நிலவரப்படி, 25 மாவட்டங்களையும் பாதித்த மோசமான வானிலை காரணமாக 627 பேர் உயிரிழந்ததாகவும், 190 பேர் காணாமல் போனதாகவும் பேரிடர் மேலாண்மை மையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் (232) பதிவாகியுள்ளன.
நுவரெலியா (89), பதுளை (90), குருநாகல் (61), கேகாலை (32), புத்தளம் (35) மற்றும் மாத்தளை (28) ஆகிய இடங்களில் மரணங்களின் எண்ணிக்கை கவலைக்குறிய வகையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 பேர் பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடர் காரணமாக 4,517 வீடுகள் முழுமையாகவும், 76,066 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |