38 பேர் நாட்டை பொறுப்பேற்க முன்வந்ததற்கு ரணிலே காரணம் : கட்சி தாவிய ராஜித வீராப்பு

Dr Rajitha Senaratne Ranil Wickremesinghe Election
By Sumithiran Aug 31, 2024 10:23 PM GMT
Report

அன்று ஆட்சியை ஏற்க ஒருவரேனும் முன்வரவில்லை. ஆனால் இன்று நாட்டை பொறுப்பேற்க 38 பேர் முன்வந்துள்ளனர். அந்த நிலைக்கு நாட்டை கொண்டு வந்திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) வெற்றியென நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன (rajitha senaratne)தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜித சேனாரத்ன எம்.பி. இதனைக் குறிப்பிட்டார். அவா் மேலும் தெரிவிக்கையில்,

எவரும் நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இன்று 39 பேர் முன்வந்துள்ளனர். அவர்கள் பெருமளவு செலவு செய்து பிரசாரம் செய்கின்றனர். 2022 இல் இவர்கள் எவரும் நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை.

38 பேர் நாட்டை பொறுப்பேற்க முன்வந்ததற்கு ரணிலே காரணம் : கட்சி தாவிய ராஜித வீராப்பு | 38 People Are Contesting The Election

அன்று நான் எதிர்க்கட்சி தலைவருடன் இருந்தேன். அவரை அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினோம். அன்று ஹர்ஷ டி சில்வா போன்றவர்கள் அதிகாரத்தில் கை வைத்தால் சுட்டுவிடும் என்று எதிர்க்கட்சி தலைவருக்கு அச்சம் காட்டினர்.

ரணிலின் செயற்றிட்டங்களை மாற்றினால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும்: எச்சரிக்கும் எம்.பி

ரணிலின் செயற்றிட்டங்களை மாற்றினால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும்: எச்சரிக்கும் எம்.பி

மக்கள் வரிசைகளில் நின்றுநின்று உழன்று போயினர்

மக்கள் வரிசைகளில் நின்றுநின்று உழன்று போயினர். துறைமுகத்துக்கு வந்த கப்பல்கள் திரும்பிச் சென்றன. நாட்டு மக்களுக்கு ஒரு நாள் சாப்பாடு கூட கொடுக்க முடியாமல் இருந்தனர். ஒரு சதம் கூடம் இல்லாத நாடுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்தது.

38 பேர் நாட்டை பொறுப்பேற்க முன்வந்ததற்கு ரணிலே காரணம் : கட்சி தாவிய ராஜித வீராப்பு | 38 People Are Contesting The Election

ரணிலுக்கு ஆதரவாக அம்பாறையில் உலா வரும் வெள்ளைக்குதிரைகள்

ரணிலுக்கு ஆதரவாக அம்பாறையில் உலா வரும் வெள்ளைக்குதிரைகள்

சஜித்துக்கும் பதவி மீது ஆசை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்ட பின்னர் சஜித்துக்கும் பதவி மீது ஆசை வந்தது. மறுமுனையில் அநுரவுக்கும் கோட்டாபய ராஜபக்‌ச அழைப்பு விடுத்தார். அநுரவும் ஓடி மறைந்தார். சரத் பொன்சேகாவையும் அழைத்தார். அவரும் நிபந்தனைகளை கூறினார்.

38 பேர் நாட்டை பொறுப்பேற்க முன்வந்ததற்கு ரணிலே காரணம் : கட்சி தாவிய ராஜித வீராப்பு | 38 People Are Contesting The Election

அன்று ஒருவரும் ஆட்சியை ஏற்க தயாராக இருக்கவில்லை. அப்படியிருந்த நாட்டை பொறுப்பேற்க 38 பேர் வரும் நிலைக்கு இந்த நாட்டை கொண்டு வந்திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026