தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் மாதம் ஆரம்பம்
தமிழ் இனத்திற்காக உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவேந்தல் மாதம் இன்று (19.03.2026) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நாவலடியில் உள்ள அன்னாரது நினைவுத் தூபியில் மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாதத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அன்னை பூபதியின் மகள் மற்றும் உறவினர்கள் நினைவுத்தூபியில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
32 நாட்கள் உண்ணாவிரதம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில்இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி தொடர்ந்து 32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஏப்ரல் 19ஆம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
இந்திய இராணுவத்தை வெளியேறுமாறும், விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்தை நடாத்துமாறும் ஒன்பது அம்ச கோரிக்கையை முன்வைத்து அன்னை பூபதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |