இந்தியாவின் பல பகுதிகளில் பாரிய நிலநடுக்கம்
இந்திய தலைநகர் டெல்லியில் (Delhi) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து அறியப்படுத்தியுள்ளது.
இந்த திடீர் நிலநடுக்கம் இன்று (10) காலை 9.04 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கம் தலைநகர் டெல்லி, உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மற்றும் காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டுள்ளது.
அத்தோடு, அரியானாவின் குராவாரா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
