நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து : இருவர் படுகாயம்
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Accident
By Raghav
மத்தேகொடை பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தின் போது முச்சக்கரவண்டி ஒன்றும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் காரொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்